தாவடி நுழைவாயிலிலே வீற்றிருக்கும் அம்பலவாண வேதவிநாயகருக்கு மகா கும்பாபிஷேகப் பெருவிழா: திரண்ட அடியவர் கூட்டம்!


 யாழ்.தாவடியின் நுழைவாயிலிலே வீற்றிருந்து அருள்பாலிக்கும் தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) காலை-08.21 மணி தொடக்கம் முற்பகல்-10.33 மணி வரையுள்ள சுப வேளையில் மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.