சாதாரணதரப் பரீட்சை 17 ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும்- 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி ஏற்பட்டால் எதிர்வரும்- 10 ஆம் திகதிக்கு முன்னர்  இணையத்தளம் ஊ டாகச் சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.