கலையூடாகத் தன்னம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான களமாகச் செயற்திறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் நாடக இரவு நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (22.03.2025) மாலை-05 மணி முதல் இரவு-08 மணி வரை நல்லூர் முதலாவது குறுக்கு வீதியில் இயங்கி வரும் செயற்திறன் அரங்க இயக்கத்தின் திறந்தவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.
இதன்போது சிறுவர்களுக்கான மகிழ்களச் செயற்பாடுகள் மற்றும் செயல் திறன் அரங்க இயக்கத்தின் 'ஒற்றுமையின் சின்னம்' சிறுவர் நாடகம் நடைபெறுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.