தற்போது ஆதார வைத்தியசாலைகள் அல்லது அவற்றுக்கு அடுத்த தரத்திலான வைத்தியசாலைகளில் மாத்திரமே விசேட வைத்தியர்களின் சேவை காணப்படும் நிலையில் கிராமிய வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் சேவையை விரிவுபடுத்துவதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாகப் பிரதியமைச்சர் டாக்டர் ஹங்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
முன்னோடி வேலைத்திட்டமாக கண்டி மாவட்டத்தின் ஆறு வைத்தியசாலைகளில் அடுத்த மாதம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். கிராமிய வைத்தியசாலைகளில் வாரத்திற்கு ஒருநாள் விசேட வைத்தியர்களின் சேவையைப் பெற்றுக்கொடுக்க இதனூடாக எதிர்பார்ப்பதாகவும், கிராமிய வைத்தியசாலைகளிலிருந்து நகர வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதே இதன் நோக்கமாகுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.