கிராமிய உழைப்பாளர் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து நடாத்தும் மரியநாயகம் நியூட்டன் எழுதிய "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை (19.04.2025) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமன் குமார, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.