ஏழாலையில் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு

யாழ்.ஏழாலை தெற்கு அ.மி.த.க பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு-2025 வியாழக்கிழமை (03.04.2025) பிற்பகல்-01.55 மணி முதல் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

பாடசாலை அதிபர் திருமதி.சோ.எட்வின்ராஜ்குமார் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ.இராமநாதன் பிரதம விருந்தினராகவும், ஏழாலை தெற்கு கிராம அலுவலர் சு.சிவராமன் சிறப்பு விருந்தினராகவும், சூராவத்தை முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர் வே.ஜெயகாந்தன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.