உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவு நிலவரம்: வெளியான தகவல்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்ரி குணரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் கூடும் எனத் தற்போது அரசாங்கத்திற்குப் புலனாய்வு அறிக்கைகளின் ஊடாகத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்காரணமாகவே ஜனாதிபதி தற்போது தேர்தல் மேடைகளில் எல்லாம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திசைகாட்டிக்கு அதிகாரம் வழங்கப்படாவிட்டால் உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது எனத் தேர்தல் விதிகளை மீறும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். ஜனாதிபதியின் இவ்வாறான கருத்துச் சட்டத்திற்கு முரணானது.

எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் உள்ளூராட்சி சபைகளுக்குக் கட்டாயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றார்.