இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையத்தின் 23 ஆவது புனருத்தாரண ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம் அண்மையில் இணுவில் பொதுநூலகக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையத்தின் அங்கத்தவர்கள், கிராமத்தவர்கள் என 24 பேர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.