கோண்டாவிலில் சிறுவர் சந்தை

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தினதும் குமரன் விளையாட்டுக் கழகத்தினதும் ஆதரவில் இயங்கும் குட்டிச்சுட்டி முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை நிகழ்வு-2025 ஞாயிற்றுக்கிழமை (20.04.2025) காலை-08.30 மணியளவில் கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ள கடைத் தொகுதியில் சனசமூக நிலையத் தலைவர் து.சுதன் தலைமையில்  இடம்பெறும்.   

இந் நிகழ்வில் குமரன் விளையாட்டுக் கழக லண்டன் கிளையின் தலைவர் இரட்ணம் யோகலிங்கம் பிரதம விருந்தினராகவும், ஊர்காவற்துறைப் பிரதேச சபையின் எழுவைதீவு உப அலுவலகப் பொறுப்பதிகாரி சிவப்பிரகாசம் சிவசாந்தன், ஓய்வுநிலை அதிபர் சண். வாமதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.