161 உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெள்ளிக்கிழமை (23.05.2025) வெளியிடப்படுமெனத் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள 178 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு தொடர்புடைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.