'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை மறுதினம் சனிக்கிழமை (31.05.2025) முற்பகல்-11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறும்.
இவ் ஆலய மஹோற்சவத்தில் அடுத்தமாதம்-04 ஆம் திகதி புதன்கிழமை மாலை-06.30 மணியளவில் மஞ்சத் திருவிழாவும், 05 ஆம் திகதி மாலை-06.30 மணியளவில் திருக்கைலாச பர்வதக் காட்சியும், 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-06.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 09 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.
காலை உற்சவம் காலை-07.30 மணியளவிலும், மாலை உற்சவம் மாலை-05.30 மணியளவிலும் ஆரம்பமாகுமென ஆலய ஆதீன கர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.