சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் 329 ஆவது வைகாசி மாத மலர் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (30.05.2025) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஓய்வுநிலைக் கிராம அலுவலர் செ.ஞானசபேசன் மலரின் வெளியீட்டுரையையும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் துரை.கணேசமூர்த்தி மலரின் மதிப்பீட்டுரையையும் ஆற்றவுள்ளனர். அதனைத் தொடர்ந்து உதவித் திட்ட்ங்களும் வழங்கப்படவுள்ளன.