பல்கலைக்கழகங்களில் உளப் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களுக்கு விசேட வேலைத் திட்டம்!

பல்கலைக்கழகங்களில் உள ரீதியாகப் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உளவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களை இணைத்துக் குறித்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் மருத்துவர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் பதிவான பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் மற்றும் ஏனைய மோதல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதுகுறித்துப் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.