வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (12.05.2025) 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களிற்கமைய குறித்த கைதிகள் விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர்.
அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள், சிறு குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை அனுபவித்த 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் எஞ்சிய தண்டனைக் காலம் இரத்துச் செய்யப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.
குறித்த விசேட பொது மன்னிப்பின் கீழ் 4 பெண் கைதிகளும், 384 ஆண் கைதிகளும் விடுவிடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.