764 மற்றும் 769 ஆகிய வழித் தடங்களின் பேருந்து சேவைகளைக் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (20.05.2025) எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமுமில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்துக்கு அமைவாகப் பேருந்துச் சேவையை ஒழுங்குபடுத்திக் கண்காணிப்பதாக யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆளுநர் செயலகக் கூட்டத்தில் உறுதியளித்திருந்த நிலையில் அதனைச் செயற்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குத் தொலைபேசியூடாக அறிவுறுத்தினார்.