வல்வெட்டித்துறையில் மனித உயிர்கள் காக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

தற்போது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அவசர இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வை 1975 நட்புக்கள், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை யாழ்.வல்வெட்டித்துறை நெடியகாட்டில் அமைந்துள்ள கணபதி மஹால் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கும் அனைவருக்கும் ஊக்குவிப்பு அன்பளிப்புக்கள், நினைவுச் சின்னம் வழங்கப்படவுள்ளன. இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ள அனைவரும் உடனடியாக 0779911131 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இரத்தத் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு இந் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு மனித உயிர்கள் காக்க ஒன்றிணையுமாறும் இரத்ததானமுகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.