நல்லூரில் இன்று சிறுவர் மகிழ்களம்

செயற்திறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் படைப்பாற்றலுக்கும், ஆளுமை விருத்திக்குமான களமாக சிறுவர் மகிழ்களம் மற்றும் சிறுவர் நாடக இரவு இன்று சனிக்கிழமை (24.05.2025) மாலை-05 மணி முதல் இரவு-08 மணி வரை நல்லூர் முதலாவது குறுக்கு வீதியில் அமைந்துள்ள செயற்திறன் அரங்க இயக்க அரங்கில் இடம்பெறவுள்ளது.  

இந் நிகழ்வில் சிறுவர்கள் கலந்து கொண்டு ஆடலாம், பாடலாம், விளையாடலாம், கதை கேட்கலாம், சுவரில் வரையலாம், நாடகம் பார்க்கலாம் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.