மூத்த எழுத்தாளரும், உளவளத் துணையாளருமான கோகிலா மகேந்திரன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான இணைகரத்தின் அயற்கோணங்கள் புத்தக அறிமுக நிகழ்வு நாளை சனிக்கிழமை (24.05.2025) மாலை-03.30 மணியளவில் அம்மன் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் இல்லத்தில் இளம் இலக்கிய விமர்சகர் சற்குணம் சத்தியதேவன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈஸ்வரநாதபிள்ளை குமரன், யாழ்.கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய ஆசிரியை தமயந்தி கணேசானந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உரைகள் ஆற்றுவர். நூலாசிரியர் கோகிலா மகேந்திரன் ஏற்புரையையும், எங்கட புத்தகங்கள் இல்ல நிறுவுநர் குலசிங்கம் வசீகரன் நன்றியுரையையும் நிகழ்த்துவர். கவிஞரும், இளம் ஆய்வாளருமான மாதவி உமாசுதசர்மா நிகழ்ச்சியை முன்னிலைப்படுத்துவார்.