ஈழத்துச் சித்தர் நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை சனிக்கிழமை (24.05.2025) காலை-09 மணி முதல் நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
அபிஷேக வழிபாடு, திருமுறை, நற்சிந்தனை ஓதுதலைத் தொடர்ந்து 'திருமுறையின் பெருமை' எனும் தலைப்பில் கலாபூஷணம் சிவஸ்ரீ.கதிர் குமாரசுவாமி சுமுகலிங்கம் குருக்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துவார்.