உரும்பிராய் இராமகிருஷ்ண மிஷன் நலன்புரி நிலையத்தின் ஏற்பாட்டில் ஆன்மீக, பண்பாட்டு, கல்வி, உள மேம்பாட்டுக்கான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) மாலை-04 மணி முதல் மாலை-06 மணி வரை உரும்பிராயில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷன் நலன்புரி நிலையத்தின் பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ் கலந்து கொண்டு ஆன்மீக உரை ஆற்றுவார். நிகழ்வில் பிரார்த்தனை, பஜனை, ஆன்மீக உரை, மாணவர் நிகழ்ச்சிகள், வழிகாட்டல் தியானம் என்பன நடைபெறும்.