கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் சனிப் பிரதோச விரத விசேட வழிபாடு

கீரிமலை நகுலாம்பிகாதேவி நகுலேஸ்வரர் ஆலயத்தில் சனிப் பிரதோச விரத விசேட வழிபாடு இன்று சனிக்கிழமை (24.05.2025) மாலை சிறப்பாக இடம்பெற்றது. 

இன்று மாலை-03.30 மணியளவில் அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகல்  நடைபெற்றது. மாலை-05 மணியளவில் வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றுத் தொடர்ந்து  நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப் பெருமான் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.