முன்னாள் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் இளங்கோவனின் மணி விழாவும் சேவைநலன் பாராட்டும்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராகவும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் கடமையாற்றியவரும், பல்வேறு அமைச்சுக்களின் செயலாளராகக் கடமையாற்றியவரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தனுமாகிய இலட்சுமணன் இளங்கோவனின் மணிவிழாவும், சேவைநலன் பாராட்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) பிற்பகல்- 02 மணி முதல்  புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்க மண்டபத்தில் புங்குடுதீவு கலைப் பெருமன்றத்தின் செயலாளர் பேராசிரியர் கா.குகபாலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்வில் கல்வியியலாளர்கள், அரச உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு பாராட்டுரைகள் ஆற்றவுள்ளனர். 

நிகழ்வில் புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவிகளின் நடனம், விழா நாயகனைக் கெளரவித்தல், விழா நாயகன் ஏற்புரை என்பன இடம்பெறும். விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.