நேற்று வெள்ளிக்கிழமை(30.05.2025) இரவு-08 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்புத் தொடர்பான ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.