நல்லூரில் சிறுவர் மகிழ்களம்

செயற்திறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் படைப்பாற்றலுக்கும், ஆளுமை விருத்திக்குமான களமான சிறுவர் மகிழ்களம் மற்றும் சிறுவர் நாடக இரவு இன்று சனிக்கிழமை (30.05.2025) யாழ்.நல்லூரில் இடம்பெறவுள்ளது.   

இன்று மாலை-05 மணி முதல் இரவு-08 மணி வரை நல்லூர் முதலாவது குறுக்கு வீதியில் அமைந்துள்ள செயற்திறன் அரங்க இயக்கத்தின் திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்வில் 'முயலார் முயல்கிறார்', 'எங்கே எங்கே குடை எங்கே' ஆகிய சிறுவர் நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.