ஏழாலை அத்தியடி விநாயகர் மஹோற்சவம்

'ஏழாலை' எனும் கிராமம் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் முதன்மை வழிபாட்டுத் தெய்வமாக விளங்கும் ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹோற்சவம் நாளை  ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) முற்பகல்-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறும். 

இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-06 மணியளவில் கற்பூரத் திருவிழாவும், 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-06.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 09 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென ஆலய அறங்காவலர் தெரிவித்துள்ளார். மஹோற்சவத்தை முன்னிட்டுப் பத்து நாட்களும் மகேஸ்வர பூசை (அன்னதானம்) இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.