உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும்-06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதனக் குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் பணிக்குழாத்தினருக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக் குழாத்தினருக்கும், மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.