யாழ்ப்பாணம் வலிகாமத்தின் பல பகுதிகளிலும் வியாழக்கிழமை (08.05.2025) கடும் இடிமின்னல் தாக்கத்துடன் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று முற்பகல்-11.45 மணியளவில் ஆரம்பமான மழைவீழ்ச்சி சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக நீடித்தது. மழைவீழ்ச்சியின் இடையில் பலத்த காற்றும் வீசியது.
இதனால், வீதிகள், விவசாய நிலங்கள் பலவற்றிலும் மழைவெள்ளம் அதிகளவில் தேங்கிக் காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. திடீர் மழைவீழ்ச்சியால் மக்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.