சூடு பிடிக்கும் உள்ளுராட்சித் தேர்தல் களம்: யாழில் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவை மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாபெரும் இறுதிப் பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் இன்று சனிக்கிழமை (03.05.2025) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியப் பேரவையின் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று மாலை-04.30  மணியளவில் றக்கா வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இளங்கதிர் மைதானத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.         

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ம்,மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று மாலை-04 மணியளவில் நல்லூர் கிட்டுப் பூங்கா வளாகத்தில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறும். இந் நிகழ்வில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதேவேளை,  தமிழ்மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாபெரும் இறுதிப் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று சனிக்கிழமை மாலை-06 மணியளவில் திருநெல்வேலி ஆடியபாதம் வீதி, பொற்பதி வீதிச் சந்தியில் அமைந்துள்ள கஜன் திருமண மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.