யாழ்ப்பாணத்தில் பசுமை அமைதி விருதுகள்-2024 பரிசளிப்பு விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் பசுமை அமைதி விருதுகள்-2024 பரிசளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) பிற்பகல்--02.30 மணி முதல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் யோ. நந்தகோபன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன், வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் எந்திரி ச.சர்வராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.