2025 உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம்- 10ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம்-05 ஆம் திகதி வரை இடம்பெறுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம்-21 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத் தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றில் வழிகாட்டுதல்களை அவதானித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.