பகிடிவதை உள்ளிட்ட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் 16 பேர் கொண்ட விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கமைய குறித்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதைகளை இதன்மூலம் ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது