யாழ்.ஸ்கந்தவரோதய ஆரம்பப் பாடசாலையின் நூலகமும் செயற்பாட்டறையும் இணைந்த மாடிக் கட்டடத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (15.06.2025) முற்பகல்-10.30 மணியளவில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.முரளிதரன், பிரித்தானியாவைச் சேர்ந்த இ.ரகுநாதன் தம்பதியர், மருத்துவர் ரகுநாதன் ஜிசாந்தன், ரகுநாதன் லக்சயன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.