கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக் கழகத்தினதும் ஆதரவில் இயங்கும் குட்டிச் சுட்டி முன்பள்ளியின் தமிழ்த்தின விழா-2025 ஞாயிற்றுக்கிழமை (15.06.2025) காலை-08.30 மணியளவில் கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ள இராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் மேற்படி சனசமூகநிலையத் தலைவர் து.சுதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் தீவக வலய ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்லையா இளங்கோ பிரதம விருந்தினராகவும், குமரன் விளையாட்டுக் கழக கனடாக் கிளை உறுப்பினர் திருமதி.இராசதுரை ரஜீவ்காந்த் தம்பதியினர், யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலய இசை ஆசிரியர் திருமதி.வசந்தகுமாரி அமுதபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.