வடக்கில் பத்துப் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல்!

வடக்கில் அமைந்துள்ள பத்துப் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தவுள்ளதாக காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்திற்குத் தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. 

கடந்த-11 ஆம் திகதி பிற்பகல்-01.15 மணியளவில் குறித்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாகவும், இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் என்.யு.உட்லர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்புக் குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.