யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய ஓய்வுநிலை அதிபரும், சைவப் புலவருமான செ.பரமேஸ்வரனின் மணி விழாவும் மலர் வெளியீடும் இன்று திங்கட்கிழமை (02.06.2025) மாலை-03.30 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலாசார மைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் விசேட நிகழ்வுகளாக "அறுபது என்பது வாலிபமா? வயோதிபமா?" எனும் தலைப்பில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமெளலீசன் லலீசனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும், கேதீஸ்வரன் வேலதீபன் மற்றும் குழுவினரின் வயலின் இசை அரங்கு நிகழ்வும் நடைபெறும்.