மேல்மாகாணத்தில் கந்தானை, ஜாஎல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சோதனை நடவடிக்கைககளுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.