வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த ஓய்வூதியம் இம் மாதம் முதல் வழங்கப்படுமெனப் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐந்து லட்சத்துக்கும் அதிக அரச ஊழியர்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.