பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகளை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு கல்வியமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப் புறப் பாடசாலைகளில் அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதியமைச்சர் மருத்துவர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.