ஊரெழு கிளானைப் பதி பர்வதவர்த்தினி என வழங்கும் மனோன்மணி அம்பாள் ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருவிழா வியாழக்கிழமை (17.07.2025) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.
எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-08 மணியளவில் வசந்தோற்சவமும், 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு-08 மணியளவில் கைலாசவாகனதத் திருவிழாவும், 24 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை-05 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-08 மணியளவில் திருமஞ்சத் திருவிழாவும், 26 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09.15 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மஹோற்சவப் பெருவிழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.