வல்வெட்டித்துறையில் மாபெரும் இரத்ததான முகாம்

வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் 80 ஆவது அமுதவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை ஆகியன வல்வை 21 நண்பர்கள், வல்வை 1977 லண்டன் நண்பிகள், நலன்விரும்பியொருவர் ஆகியோரின் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (13.07.2025) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.   

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடை வழங்கும் அனைவருக்கும் கற்றல் உபகரணங்களுடன் அன்பளிப்புக்கள் வழங்கப்படும். நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.