சிவத்தமிழ்ச் செல்வியின் பதினேழாவது ஆண்டு குருபூசை வைபவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி ஆலயத்தின் முன்னாள் பெருந் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினேழாவது ஆண்டு குருபூசை வைபவம் ஆனிமாத விசாக நட்சத்திர நன்நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை (06.07.2025) காலை-09 மணி முதல் மேற்படி ஆலய அன்னபூரணி மண்டபத்தில் ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.