குப்பிழான் மண்ணின் முதுபெரும் கூட்டுறவாளர் சிவலிங்கத்தின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

முதுபெரும் கூட்டுறவாளர் நல்லதம்பி சிவலிங்கத்தின் பூதவுடல் இன்று வியாழக்கிழமை (10.07.2025) அவர் பிறந்த யாழ். குப்பிழான் மண்ணில் அக்கினியுடன் சங்கமமானது.      

முன்னாள் சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளரும், குப்பிழான் வீரபத்திரர் ஆலய பரிபாலன சபைத் தலைவரும், குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய முன்னாள் தலைவருமான இவர் கடந்த  திங்கட்கிழமை (07.07.2025) தனது 84 ஆவது வயதில் காலமானார்.