இணுவில் அறிவாலயத்தின் ஆதரவில் இணுவில் தமிழ்ச் சங்கம், இணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபை இணைந்து வழங்கும் இரு நாடகங்களின் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (10.07.2025) மாலை-05.30 மணியளவில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் காத்தவராயன் சிந்துநடைக் கூத்து மற்றும் முட்டை சிறுவர் நாடகம் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.சமூகத்தை ஆற்றுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெறும் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.