சபரிமலை ஐயப்பன் யாத்திரைக்கு கிடைத்த அங்கீகாரம்!

                        

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்கு வருடாந்தம் இலங்கை பக்தர்களால் மேற்கொள்ளப்படுகின்ற யாத்திரை இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை இன்று (12.08.2025) அனுமதி வழங்கியுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

வருடம் தோறும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அடுத்த வருடம் ஜனவரி மாதம்-31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தமான சபரிமலைக்கு இலங்கை பக்தர்கள் புனித தலயாத்திரை மேற்கொள்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.