சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக தெய்வீக இசை அரங்கு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) முற்பகல்-10.45 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது இசைக் கலாமணி நடேசு செல்வச்சந்திரன் குழுவினரின் தெய்வீக இசை அரங்கம் நிகழ்வு நடைபெறும். அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கேட்டுள்ளார்.