பேருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புத் தொடர்பில் மனு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் இலங்கைத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அந்தச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனம் தற்போதும் 1350 ரூபா என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் மூன்று வேளை உணவைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாதிருப்பதுடன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத உச்ச வறுமையை எட்டியுள்ளார்கள்.

எனவே, 200 வருட காலமாக குறைந்த ஊதியத்தைப் பெற்று வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கான ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.