நல்லூர் நீர்க்கண்காட்சியில் மீண்டும் மேடையேறும் செம்முகம் ஆற்றுகைக் குழுவின் நாடக ஆற்றுகை


நல்லூர் நீர்வளக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் இடம்பெற்று வருகிறது. தொடர்ந்து 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.

பலரது  வேண்டுகோளுக்கிணங்க செம்முகம் ஆற்றுகைக் குழுவின்  தண்ணீரின் கதை நாடக ஆற்றுகை ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில்  இன்று சனிக்கிழமை 23.08.2025 மாலை சரியாக 6 மணிக்கு மீண்டும் மேடையேறுகிறது. 

(கடந்த திங்கள் அரங்கேறிய தண்ணீரின் கதை நாடகத்தின் சில காட்சிகள் காணொளியில்)

எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் எம் நிலை என்னவாகும் என்பதை தத்ரூபமாக சித்தரித்த குறித்த நாடகம் கடந்த திங்கட்கிழமை ஊருணி அரங்கில் மேடையேறி பலரது உற்சாக வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தது. மீண்டும்  இன்று சனிக்கிழமை அதே ஊருணி அரங்கில் குறித்த நாடகம் மேடையேறுகின்றது.

நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.