நல்லூர் நீர் கண்காட்சியின் ஊருணி அரங்கில் காத்தான் கூத்து பாடல்களும் - யாழ்ப்பாணத்து வெட்டைகள் உரையாடலும்


நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் வரும் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை நீர்வளக் கண்காட்சி இடம்பெற்று வருகிறது. 

குறித்த கண்காட்சியின் ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில் இன்று ஊருணி அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை 22.08.2025 மாலை 6.30 மணிக்கு ந. தவசோதிநாதன், ந. நவநீசன், செ. உதயகுமாரன், நா. கிருபாகரன் ஆகிய கலைஞர்களின் ஆற்றுகையில் இடம்பெறும் காத்தான் கூத்து பாடல்களை தொடர்ந்து அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் நீர் வளமும் பொது நிலங்களும் என்ற தலைப்பின் கீழ் யாழ்ப்பாணத்து வெட்டைகள் எனும் தொனிப்பொருளிலான கருத்துரையை தொடர்ந்து உரையாடலும் இடம்பெறும்.