“குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம்!, வடக்கு- கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து!” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) காலை-09 மணியளவில் கொழும்பு நாடாளுமன்றச் சுற்றுவட்டப் பகுதியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
முல்லைத்தீவு குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த மாதம்-17 ஆம் திகதி முல்லைத்தீவு அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் ஏழு மணி நேரம் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்தனர். அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது முன்னிலையாக வேண்டும், விசாரணை தொடர்பான விடயங்கள் தொடர்பில் வெளியே கூறக் கூடாது எனவும் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டே சுயாதீன ஊடகவியலாளர் குமணன் விடுவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.