சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) முற்பகல்-10.45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் ஆசிரியரும், சைவப்புலவருமான இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு 'மகாபாரதம்' எனும் தலைப்பில் தொடர் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்.